காங்கிரஸ் தலைவர் யார்? - நீடிக்கும் குழப்பம் - அசோக் கெலாட், சசி தரூர் இடையே போட்டி
Sep 22 2022 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரு. ராகுல் காந்தி தொடர்ந்து மவுனம் காப்பது கட்சித் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திவுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுதினம் தொடங்கவுள்ள போதிலும், திரு.ராகுல் காந்தி மௌனமாக உள்ளார்.
இந்நிலையில், அண்மையில் டெல்லி சென்ற, கட்சித் தலைமையை விமர்சித்த ஜி23 தலைவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. திரு சசிதரூர், திருமதி.சோனியா காந்தியை சந்தித்தார். நேற்று டெல்லி சென்ற ராஜஸ்தான் முதலமைச்சர் திரு.அஷோக் கெலாட்டும் திருமதி. சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திரு. கெலாட் மற்றும் திரு. சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.