கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் ஆடு, மாடுகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த புலி : மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை அதிகாரிகள்
Sep 22 2022 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் ஆடு, மாடுகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கூர்க் மாவட்டத்தின் மல்தாரே பகுதியில் புலி ஒன்று கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து ஆடு மாடுகளை வேட்டையாடி பொது மக்களை அச்சுறுத்தி வந்தது. புலியை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, வனத்துறையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி மல்தாரே பகுதியில் காஃபி தோட்டத்தில் பதுங்கி இருந்த புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனால் மால்தாரே பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.