உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை எதிரொலி - வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழப்பு
Sep 22 2022 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்து வந்த 5 குழந்தைகளும், அவர்களின் பாட்டியும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருந்தபோதிலும், இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரு குழந்தையும், பாட்டியும் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த 5 குழந்தைகளின் பெற்றோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், 5 குழந்தைகளும், அவர்களின் 75 வயது பாட்டியால் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.