புதுச்சேரி, காரைக்காலில் காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகள் - 200 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Sep 22 2022 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி காரைக்காலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் வார்டில் 187 பேரும், காரைக்கால் மருத்துவமனையில் 13 குழந்தைகளும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மேலும், புதுச்சேரி காரைக்காலில் பெரியவர்கள் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 656 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் 74 பேரும் காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.