இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு - சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
Sep 23 2022 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கின. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 319 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 800 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 91 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 539 புள்ளிகளாகவும் இருந்தன. பின்னர் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 552 புள்ளிகள் குறைந்தது.