காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் : ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெல்லாட் போட்டி - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
Sep 23 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அஷோக் கெல்லாட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அஷோக் கெல்லாட் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வேட்பு மனுத் தாக்கல் தேதி குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருமதி. சோனியா காந்தி குடும்பத்திலிருந்து யாரும் வரக்கூடாது என்பதில் திரு. ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாகவும், அவரது முடிவை மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.