கேரளாவில் PFI அமைப்பு நடத்தும் பந்த் - பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
Sep 23 2022 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி கேரளாவில் இன்று காலை 6 மணி முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சியில் இருந்து தினந்தோறும் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கும் பேருந்துகளை இயக்கப்படுகின்றன. தற்போது நடைபெற்றுவரும் முழு அடைப்பு காரணமாக பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.