கனடா செல்லும் இந்தியர்கள், மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
Sep 23 2022 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளதால் கனடா செல்லும் இந்திய மாணவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.
கனடா செல்லும் இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை அரசு வெளியிட்டது. அதில் கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக நிகழும் வெறுப்புக் குற்றச் செயல்கள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் கனடாவில் பயணம் செய்யும் போது மற்றும் படிக்கும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.