புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு : உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
Sep 26 2022 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவலை கருத்தில் கொண்டு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. காய்ச்சல் பரவல் படிப்படியாக குறைந்ததால் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. ஒரு வாரத்திற்கு பிறகு மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.