காங்கிரசிலிருந்து அண்மையில் விலகிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கினார்
Sep 26 2022 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரசிலிருந்து அண்மையில் விலகிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு. குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கியுள்ளார். கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் சூட்டியுள்ளார்.
காங்கிரசில் இருந்து கடந்த மாதம் 26-ம் தேதி திரு. குலாம் நபி ஆசாத் விலகினார். இதனைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கட்சியில் இருந்து விலகினர். அப்போது திரு. ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்த அவர் விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், திரு. குலாம் நபி ஆசாத் இன்று புதிய கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் வைத்துள்ள அவர், கட்சியின் புதிய கொடியையும் வெளியிட்டார்.