கேரளாவில் தொடரும் நடைபயணம் - சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த ராகுல்காந்தி
Sep 26 2022 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தனது நடைப்பயணத்தின் போது ராகுல்காந்தி சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
கன்னியாகுமரியில் இருந்து தனது பாரத் ஜோதா யாத்ரா நடைப்பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது கேரளா வழியாக பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பாலக்காட்டில் அவர் நடைப்பயணம் மேற்கொண்ட போது உள்ளூர் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். சிறுவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டே அவர் நடைப் பயணம் மேற்கொண்ட காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.