இந்திய மாணவர்களுக்கு கல்வி விசாவை விரைந்து வழங்க வேண்டும் : நியூசிலாந்து வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் கோரிக்கை
Oct 6 2022 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து நாட்டிற்கு கல்வி பயில வரும் இந்திய மாணவர்களுக்கு விரைந்து விசா வழங்க வேண்டுமென மத்திய வெளியூறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் நனையா மஹுதாவை திரு.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தோ பசிபிக் ஒற்றுமை, உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடு அதிகமுள்ள நிலையில், சுதந்திரமான பிராந்தியத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனவும் திரு.ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளுக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு கல்வி பயில வரும் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், விசா விரைந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், திரு.ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.