முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது - தொலைபேசி மூலம் மிரட்டிய நபரை பீகாரில் கைது செய்தது மும்பை போலீஸ்
Oct 6 2022 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குனர் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குனர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று நண்பகலில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனையை தொடர்பு கொண்டு மருத்துவமனையை வெடி வைத்து தகர்க்க போவதாக கூறியதுடன், கொலை மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பை டி.பி மார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மர்ம தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த நபர் பீகார் மாநிலம் தர்பங்காவில் இருப்பதை கண்டறிந்த போலீசார், பீகார் போலீஸ் உதவியுடன் அந்த நபரை கைது செய்தனர்.