3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி - ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை தகவல்
Nov 24 2022 9:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கியதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அக்னி-3 ஏவுகணை, ஒன்றரை டன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 2 ஆயிரத்து 200 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஏவுகணை சில நட்பு நாடுகளை ஈர்த்துள்ளதால், அதை ஏற்றுமதி செய்ய இந்தியாவை அணுகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.