மேகாலயா மக்களுக்கும் அசாம் காவல்துறை மற்றும் வனத்துறைக்கும் இடையே நிகழ்ந்த வன்முறை சம்பவம் - வனக்காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்ததை அடுத்து சிபிஐ விசாரணைக்கு அசாம் முதலமைச்சர் பரிந்துரை
Nov 24 2022 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம்-மேகாலயா எல்லையில் நடைபெற்ற வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா பரிந்துரை செய்துள்ளார். அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கிடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் மரக் கடத்தல் தொடர்பாக எல்லையோர மேகலாயா மக்களுக்கும் அசாம் காவல்துறை மற்றும் வனத்துறைக்கும் மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறியது. துப்பாக்கிச்சூட்டில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேரும் கலவரத்தில் அசாம் வனத்துறை காவலரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அசாம் பரிந்துரைத்துள்ள நிலையில் அதற்கு மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.