தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலிஜியம் போன்ற அமைப்பு வேண்டும்... உச்சநீதிமன்றம் கருத்து
Nov 24 2022 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு கொலிஜியம் போன்ற அமைப்பு வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி கே.எம். ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் கொலிஜியம் போன்ற அமைப்பு வேண்டும் என்றும், அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என்றும், அப்போதுதான் ஆணையத்தின் சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், அனைத்துக்கும் தலையாட்டும் நபர்களை நியமித்தால், ஆணையத்தின் கட்டமைப்பே சீர்குலைந்து விடும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.