பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோயை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி
Nov 24 2022 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாபில் பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை 10 நாள்கள் தேசிய புலனாய்வு முகமை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பஞ்சாபில் தாதாவாக செயல்படும் லாரன்ஸ் பிஷ்னோய் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து தேசிய புலனாய்வு முகமை பிஷ்னோயை விசாரணை செய்ய தீவிரம். விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை 12 நாட்கள் காவிலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் 10 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.