ராணுவ வீரர்கள் குறித்து நடிகை ரிச்சா சத்தா அவதூறு கருத்து - மேற்கு இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் கண்டனம்
Nov 24 2022 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை ரிச்சா சத்தாவுக்கு மேற்கு இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் உயிரை பறிகொடுத்த ராணுவ வீரர்கள் குறித்து ரிச்சா பேசியது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் மேற்கு இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. ரிச்சா சத்தாவின் நடவடிக்கை அனைத்து சினிமா சார்ந்த சங்கங்கள் கண்டிக்க வேண்டும் எனவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் FWICA கேட்டுகொண்டுள்ளது.