நாட்டில் சில மாநிலங்களில் தட்டம்மை, ருபெல்லா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு... குழந்தைகளுக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு
Nov 25 2022 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தட்டம்மை, ருபெல்லா வைரஸ் பாதிப்பு சில மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், 9 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அதற்கான தடுப்பூசியை ஒரு டோஸ் கூடுதலாக செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தட்டம்மை, ருபெல்லா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதற்கான தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, 9 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ருபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.