மஹாராஷ்ட்ராவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் : மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதி
Nov 25 2022 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மராட்டியத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். கர்நாடகா - மஹாராஷ்ட்ரா இடையே பெலகாவி எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. பெலகாவியை கர்நாடகா சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, மராட்டியத்தின் எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் தங்களது அரசு உறுதியாக உள்ளதாகவும், மராட்டியத்தின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்றும், மராட்டியத்தின் ஒரு கிராமம் கூட கர்நாடகாவுக்கு செல்லாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.