பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி முறையில் உச்சநீதிமன்ற ஆவணங்களை மொழிபெயர்க்க உத்தரவு
Nov 25 2022 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி முறையில், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும், வழக்கறிஞர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பார்வை குறைபாடு உடையவரான மூத்த வழக்கறிஞர் ருங்டா விசாரணை ஒன்றிற்காக ஆஜரான போது வழக்கின் ஆவணங்களை நீங்கள் எவ்வாறு படிக்கிறீர்கள் என தனிப்பட்ட முறையில் அவரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், எதிர் மனுதாரர் வழங்க கூடிய அனைத்து ஆவணங்களையும் சாஃப்ட்வேர்கள் மூலம் பிரெய்லி முறையில் மொழிபெயர்த்துக் கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து உச்சநீதிமன்ற ஆவணங்கள் அனைத்தையும் ப்ரெய்லி முறையில் மொழியாக்கம் செய்ய தேசிய தகவல் மையம் புதிய மென்பொருளை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என சந்திரசூட் கேட்டுக்கொண்டார்.