டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ.க. சதி செய்வதாக புகார் : மணிஷ் சிசோடியா பகிரங்க குற்றச்சாட்டு
Nov 25 2022 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க. சதி திட்டம் தீட்டிவருவதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி காரணமாக, அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ.க. சதி செய்து வருவதாக சிசோடியா தெரிவித்துள்ளார். இதற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் மணிஷ் திவாரி திட்டமிட்டு வருவதாகவும், குண்டர்களை தயார் செய்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார். இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை பாஜக மீது ஆம் ஆத்மி சுமத்துவதாக பாரதிய ஜனதா தலைவர்கள், சிசோடியாவின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளனர்.