அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் : அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு
Nov 26 2022 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 161 அடி உயரத்துக்குக் கட்டப்படவுள்ள இக்கோயிலில் தற்போது ஐந்து மண்டபங்களை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கோயிலின் உள்ளே ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்படும் வெள்ளை நிற மார்பிள் கற்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.