பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தொற்று தடுப்பு பூஸ்டர் டோஸ்
Nov 26 2022 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தொற்று தடுப்பு பூஸ்டர் டோசுக்கு அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதலை மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மூக்கு மூலம் செலுத்தப்படும் இன்கோவாக் என்றபெயர் சூட்டப்பட்ட இந்த தடுப்பு மருந்து நாட்டிலேயே முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் 6 மாதங்களுக்கு பிறகு மூன்றாவது பூஸ்டர் டோஸாக இதனை செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் மூக்கில் ஏற்படும் தொற்று பரவலை தடுக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊசி மூலம் இந்த பூஸ்டரை செலுத்த தேவையில்லை என்றும் மூக்கு வழியாக செலுத்தினாலே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.