பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனான கூட்டத்தில் அஜித் தோவல் வலியுறுத்தல்
Dec 7 2022 8:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அஜித் தோவல், பயங்கரவாத செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ எவ்வகையான உதவியும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.