அட்டாரி-வாகா அணிவகுப்பு நிகழ்வை காண ஆன்லைன் முன்பதிவு வசதி - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருமென அறிவிப்பு
Dec 7 2022 10:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் நாள்தோறும் மாலையில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடியை கீழே இறக்கும் நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை, ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான இணையதளத்தை எல்லை பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது. நிகழ்வை பார்க்க விரும்பும் நாளிற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், 12 பேர் வரை ஒரே குழுவாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இதற்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியை கீழே இறக்கும் நிகழ்ச்சியை காண விரும்புவோருக்கு, உறுதியாக இருக்கை கிடைக்க, இந்த முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.