வடகொரியாவில் தடை செய்யப்பட்ட நாடகத்தை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை- மக்கள் மத்தியில் தூக்கில் தொங்கவிடப்பட்டதாக தகவல்
Dec 7 2022 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கே-டிராமா என்ற நாடகத்தை பார்த்த சிறுவர்கள் இருவரை வடகொரிய அரசு தூக்கில் போட்டது. கொரியன் டிராமா என்ற கே-டிராமா மற்றும் அமெரிக்க திரைப்படங்களை பார்க்க வட கொரியாவில் தடை உள்ளது. இந்நிலையில் ரியங்கங்க் நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் அமெரிக்க மற்றும் தென் கொரிய டிராமாக்களை பார்த்ததாகவும், அவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பொதுவெளியில் மக்கள் மத்தியில் தூக்கில் போடப்பட்டதாகவும், தி மிரர் நாளிதழ் தெரிவித்துள்ளது.