9,125 கார்களை திரும்ப பெற மாருதி சுசுகி நிறுவனம் முடிவு : முன்வரிசை சீட் பெல்ட் தோள்பட்டை உயரத்தை சரிசெய்ய நடவடிக்கை
Dec 7 2022 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாருதி கார்களில் முன்வரிசை சீட் பெல்ட் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் பொருட்டு 9 ஆயிரத்து 125 கார்களை திரும்ப பெற மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, கிராண்ட் விட்டாரா, XL6 ஆகிய மாடல்கள் கார்கள் திரும்ப பெறப்படுகின்றன. சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஆய்வு செய்வதற்கும், பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கும், கார்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.