மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் : சிறுவனை உயிருடன் மீட்க பேரிடர் மீட்பு படை தீவிர முயற்சி
Dec 7 2022 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீட்டல் மாவட்டத்திற்குட்பட்ட மாண்டவி கிராமத்தில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன், அப்பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். வெகுநேரம் ஆகியும் மகனை காணாததால் சந்தேகம் அடைந்த தாய் வெளியில் வந்து பார்த்தபோது சிறுவன் ஆழ்துளை
கிணற்றில் விழுந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் கிடைத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில், சிறுவன் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறில் உள்ள சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.