உத்தரப்பிரதேசம்: சூதாட்டத்தால் காணாமல் போன மனைவியை மீட்டுத்தர காவல்நிலையத்தில் கணவர் புகார்
Dec 7 2022 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்-லைன் லூடோ விளையாட்டில் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண், தோல்வியை தழுவிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. கணவர் ராஜஸ்தானில் வேலை பார்த்துவரும் நிலையில், 2 குழந்தைகளுடன் உத்தரப்பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தில் வசித்து வந்த ரேணு என்ற பெண், ஆன்லைன் லூடோ விளையாட்டுக்கு அடிமையாக இருந்துள்ளார். கணவர் அனுப்பும் பணத்தை வைத்து, தான் வசித்து வரும் வீட்டின் உரிமையாளருடன் ஆன்-லைன் லூடோ விளையாடி வந்துள்ளார் ரேணு. கணவர் அனுப்பிய பணம் முழுவதையும் ஆன்-லைன் லுடோ சூதாட்டத்தில் இழந்த ரேணு, ஒரு கட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து ஆடியுள்ளார். இதிலும் தோல்வி கண்டதால், வீட்டின் உரிமையாளருடன் ரேணு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து பதறிய கணவர், மனைவி ரேணுவை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.