ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு குழு அமைப்பு - மத்திய அமைச்சர் தகவல்
Dec 7 2022 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குப்படுத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துவதற்கான கட்டமைப்பு இல்லாத காரணத்தினால், ஆன்லைன் கேமிங்-ல் உள்ள சிக்கலை கருத்தில் கொண்டு, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி, உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், விளையாட்டுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட குறிப்பிட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார், அக்குழு ஆன்லைன் கேமிங்கில் உள்ள சிக்கலை களைவதற்கான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.