இந்தியாவில் நவம்பர் மாதம் வரை 50 நகரங்களில் 5ஜி சேவை செயல்படுத்தப்பட்டிருக்கிறதாக மத்திய அரசு தகவல்
Dec 7 2022 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் நவம்பர் மாதம் வரை 50 நகரங்களில் 5ஜி சேவை செயல்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், 2022 அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டிருப்பதாக கூறியது. ஆனால் எந்தெந்த குறிப்பிட்ட நகரங்களில், இந்த 5ஜி சேவை செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.