இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை : நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலா ஜோஷி தகவல்
Dec 7 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியை வரும் 2025-26ம் நிதி ஆண்டிற்குள் ஆயிரத்து 288 மில்லியன் டன் அளவிற்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நாட்டின் நிலக்கரி உற்பத்தி தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலா ஜோஷி, இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது இல்லை என்று தெரிவித்தார். நாட்டில் 2020-21ம் நிதியாண்டில் 716 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2021-22ம் நிதியாண்டில் 778 மில்லியன் டன்னாக உயர்ந்திருப்பதாக கூறினார். இந்தியாவில் அதிகபட்சமாக ஒடிஷா மாநிலத்தில் அதிகளவு நிலக்கரி உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.