டெல்லி மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி - 15 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜ.க.-விடம் இருந்து பறிபோன ஆட்சி
Dec 7 2022 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாநகராட்சியை 15 ஆண்டுகளுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஆம் ஆத்மி கைப்பற்றியது. ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கான முதல் தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 132 வார்டுகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. 104 வார்டுகளை பாரதீய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 9 வார்டுகளைக் கைப்பற்றியது. டெல்லி மாநராட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவிடம் இருந்த நிலையில், தற்போது அதை உடைத்து முதன் முதலாக ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.