புதுச்சேரி சட்டபேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பிப்.3-ல் தொடக்கம் - சபாநாயகர் அறிவிப்பு
Jan 24 2023 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி சட்டபேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என்றும், அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது பேரவையில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், மார்ச் மாதம் கூடவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் திரு.செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை அரசு அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டியுள்ள சபாநாயகர், அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது பேரவையில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.