இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட காங்கிரஸ் திட்டம் : 23 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு
Jan 25 2023 10:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலின் யாத்திரை, வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவுபெறுகிறது. நிறைவு விழாவில் பங்கேற்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 23 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில், ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றும்போது, அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் அலுவலகங்களில் கொடி ஏற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.