திரையுலகில் மீண்டும் வாழ்வளித்த ரசிகர்களுக்கு நடிகர் ஷாருக்கான் உருக்கத்துடன் நன்றி - தொடர் தோல்வியால் உணவகம் தொடங்க முடிவு செய்ததாகவும் பேச்சு
Jan 31 2023 7:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திரையுலகில் மீண்டும் வாழ்வளித்த ரசிகர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பதான் திரைப்பட வெற்றி விழாவில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை என்றும் முந்தையை படங்களின் தோல்வியால் வேறு தொழிலுக்கு சென்று விடலாம் என யோசித்ததாகக் கூறினார். ரெட் சில்லிஸ் ஈட்டரி என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்க முடிவு செய்து சமையல் கூட கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார். ஆனால் பதான் படம் திரையுலகில் மீண்டும் தனக்கான வாழ்க்கையை கொடுத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார். தோல்வியுற்ற நேரத்திலும் தன்னை ரசிக்க கோடிக்கணக்கானோர் இருப்பது அதிர்ஷ்டம் என்றும் அதனால்தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் பால்கனிக்கு வந்து ரசிகர்களை சந்திப்பதாகவும் ஷாருக்கான் தெரிவித்தார்.