நாடாளுமன்றத்திற்கு குதிரைப்படை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு - குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
Jan 31 2023 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரையிலும், 2-ம் கட்ட பட்ஜெட் தொடர் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குதிரைகள் படை சூழ நாடாளுமன்றம் வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, குடியரசுத்துணைத் தலைவர் ஜகதீப் தங்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.