பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், எல்லை பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
Jan 31 2023 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பட்ஜெட் கூட்டத்தொடரில், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியை வாழ்த்துவதற்கு பதிலாக, அவரை மத்திய பா.ஜ.க. அரசு சபித்துக்கொண்டே இருப்பதாக கூறினார்.