இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Jan 31 2023 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவடைந்த நிலையில், டெல்லி திரும்பிய ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காஷ்மீரில் நேற்று நிறைவு செய்தார். இந்நிலையில், காஷ்மீரில் இருந்து ராகுல்காந்தி இன்று டெல்லி திரும்பினார். அப்போது தனது வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களை சந்தித்த ராகுல்காந்தி, அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல்காந்தியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.