சத்தீஸ்கர் மாநிலத்தில் சாம்பல் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் புதையில் சிக்கி விபத்து : 3 பேர் உயிரிழப்பு - 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
Jan 31 2023 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர் மாநிலத்தில் சாம்பல் குவாரிக்குள் சிக்கிய ஐந்து பேரில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல்வேறு தொழிற்சாலைகளில் நிலக்கரி எரிக்கப்படும்போது வெளியேறும் சாம்பல், காற்றில் கலக்காமல் இருக்க ஒரு மிகப்பெரிய குழியை உருவாக்கி மண்ணுக்குள் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சாம்பலை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அகற்றிவிட்டு மீண்டும் சாம்பல் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகருக்கு அருகே நடந்த இது போன்ற ஒரு பணியின் போது சாம்பல் குப்பைகள் சரிந்து விழுந்து குவாரியில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சாம்பல் குவாரி அமைந்துள்ள நில உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அபிஷேக் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.