உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சமூக ஊடங்களில் விமர்சனம் செய்த விவகாரம் : நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடிதம்
Mar 18 2023 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர மாநில ஆட்சி கவிழ்ப்பு வழக்கின் போது ஆளுநரின் பங்கு குறித்து குறிப்பிட்டது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்வோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தங்கா குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதியின் போக்கில் தலையிடும் வெட்கக்கேடான போக்கு என்றும், குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.