கடன்களை நிர்வகிப்பதில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தல்
Mar 18 2023 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடன்களை நிர்வகிப்பதில் வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தியுள்ளார். கொச்சியில் நடைபெற்ற ஃபெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்பிஸ் நினைவு நாள் கூட்டத்தில் பேசிய அவர், பணவீக்கம் மோசமான நிலையில் இருந்தாலும், இந்தியாவில் உள்நாட்டு நிதி அமைப்புகள் நிலையாக உள்ளதாக கூறினார். அமெரிக்காவில் ஒரு வங்கி திவாலாக அதன் சொத்துக்களை விட அதிகப்படியான கடன் பொறுப்புகளை கொண்டிருந்ததே காரணம் என அவர் குறிப்பிட்டார். எனவே வங்கிகள் சொத்து, கடன் விவகாரத்தில் ஏற்ற தாழ்வுகளை கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தினார்.