தொடர்ந்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வரும் நித்யானந்தா : அமெரிக்காவின் 30 நகரங்களை ஏமாற்றியதாக பரபரப்பு புகார்
Mar 18 2023 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் 30 நகரங்களை ஏமாற்றியதாக நித்யானந்தா மீது புகார் எழுந்துள்ளது. இந்தியாவை விட்டு தலைமறைவான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி வருகிறார். கடந்த மாதம் நடத்த ஐநா கலாச்சார உரிமைகள் குழுக் கூட்டத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் கலந்து கொண்டு அதிர வைத்தனர். ஆனால் கைலாசாவை அங்கீகரிக்கவில்லை என ஐநா விளக்கமளித்தது. அடுத்ததாக சிஸ்டர் சிட்டிஸ் என்ற அமைப்பின் மூலம் அமெரிக்காவின் 30 நகரங்களுடன் கைலாசா நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கைலாசா ஒரு உண்மையான நாடு அல்ல என்பது தெரிய வந்துள்ளதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.