தேர்தலை நடத்த ஏக்நாத் சிண்டே அரசுக்கு தைரியம் இல்லை : முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தாக்கு
Mar 18 2023 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கு ஆளும்கட்சியிடம் பதிலில்லை என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார். மும்பை மாநகராட்சியின் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வந்ததாகவும், அதை விசாரிக்க மேயர், கவுன்சிலர் இல்லை என்றும் ஆதித்யா குற்றம்சாட்டி உள்ளார். அதிகாரிகள் மூலம் தானாகவே இயங்கும் மும்பை மாநகராட்சி குறித்து கவலைப்படாத அரசு, தேர்தலை தள்ளிப் போடுவதில்தான் கவனம் செலுத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். தேர்தலை நடத்த தைரியம் இல்லாத அரசின், மற்றொரு மோசடியை தாங்கள் வெளிக்கொண்டு வருவதாகவும் ஏக்நாத் சிண்டே அரசு மீது ஆதித்யா குற்றம்சாட்டி உள்ளார்.