குஜராத் மாநிலத்தில் தொடரும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பதான் மாவட்டம் - வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளி மாணவ, மாணவிகள் டிராக்டர் மூலம் மீட்பு
Mar 19 2023 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பதான் மாவட்டம் தண்ணீரில் மிதக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவம் தவறிய மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலை சமாளிக்க ஏதுவாக இருந்தாலும் வட மாநிலங்களில் அறுவடைக் காலம் என்பதால் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் பதான் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளி மாணவ, மாணவிகளை உள்ளூர் நிர்வாகம் டிராக்டர் மூலம் மீட்டது. இதனிடையே கனமழை தொடர்வதால் பஞ்சாப்- ஹரியானாவில் கடுகு, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோதுமை மற்றும் பருப்பு அறுவடையை ஒத்திவைக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளது.