புதுச்சேரியில் சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் பணம் ஆட்சியரிடம் ஒப்படைப்பு - சிசிடிவி காட்சியை கொண்டு பணத்தை தவற விட்டவரை தேடும் போலீஸ்
Mar 19 2023 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் அண்ணா சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் 49 லட்ச ரூபாய் பணம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா சாலை செட்டித்தெரு சந்திப்பில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக பெரியகடை காவல் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் 50 வயது மதிக்கதக்க நபர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது வாகனத்தில் இருந்து பணப்பை விழுவது பதிவாகி இருந்தது.