காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரம்... பஞ்சாப்பில் நாளை வரை இணைய சேவைகள் துண்டிப்பு
Mar 19 2023 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காலிஸ்தான் ஆதரவாளரும் பிரிவினைவாதத் தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் தொடங்கி உள்ளதால், பஞ்சாபில் நேற்று முதல் இன்று நண்பகல் வரை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அம்ரித் பால் சிங் கடந்த சில வாரங்களாக பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் அமிரித்பால் ஒரு வாகனத்தின் மீது உட்கார்ந்திருப்பதும், அப்போது போலீசார் துரத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுவதும் பதிவாகி உள்ளது. இது போன்ற வீடியோக்கள் பரவாமல் இருக்க இணைய சேவைகள் முடக்கப்படுவதாகவும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் பஞ்சாப் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே அம்ரித்பால் சிங்கின் கும்பலைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.