டெல்லியில் பரபரப்பான சாலையில் பெண்ணை அடித்து, காருக்குள் ஏற்றிய மர்ம கும்பல்... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Mar 19 2023 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் பரபரப்பான சாலையில் பெண்ணை அடித்து, காருக்குள் ஏற்றிய மர்ம கும்பல்... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
டெல்லியில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் காரில் கடத்தப்பட்ட வீடியோ வைரல் ஆன நிலையில், காரும், டிரைவரும் அடையாளம் காணப்பட்டத்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி ரோகிணி பகுதியில் இருந்து விகாஸ்புரி செல்ல காரை புக் செய்த இளம்பெண் மற்றும் இரு ஆண்களுக்கிடையே திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அங்கிருந்த தப்பிக்க முயன்றபோது இரு ஆண்களும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். போலீசாரின் விசாரணையில் காரும், அதன் டிரைவரும் அடையாளம் காணப்பட்ட நிலையில் இளம்பெண் என்ன ஆனார், அவரை கடத்திய இளைஞர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் அது ரீல் ஆக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.