பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் - ஆந்திர சட்டசபையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் இடையே மோதல்
Mar 21 2023 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு தடை விதித்துள்ள அரசு உத்தரவு தொடர்பாக ஆந்திர சட்டசபையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சி எம்எல்ஏக்களும் அடிதடியில் ஈடுபட்டதால் அவை அமளிக்காடானது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தெலுங்கு தேச எம்எல்ஏக்களின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சட்டசபை வரலாற்றில் இதை "கருப்பு தினம்" எனக் குறிப்பிட்டனர். அதேபோல் தங்கள் எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டது ஆந்திராவின் கருப்பு தினம் என தெலுங்கு தேசம் கூறியுள்ளது.